செங்கல்பட்டு: செங்கல்பட்டு கலெக்டர் ராகுல் நாத் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், 2023ம் ஆண்டு பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவை புரிந்தவருக்கு அவ்வையார் விருது தமிழக முதலமைச்சரால் உலக மகளிர் தினமான மார்ச் 2023ல் வழங்கப்பட உள்ளது. விருதுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருத்தல்வேண்டும். குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் சமூக நலனை சார்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றுபவராக இருத்தல்வேண்டும்.