திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிக்கை; தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களான தனிநபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கான கடன், கல்விக் கடன் திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கைவினை கலைஞர்களுக்கு விராசத் கடன் திட்டம் 1ல் குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறமாக இருந்தால் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்துக்குகள் கிராமப் புறமாக இருந்தால் ரூ.98 ஆயிரத்துக்குள்ளும் இருக்க வேண்டும். திட்டம் 2ல் குடும்ப வருமானம் ரூ.8 லட்சத்துக்குள் இருக்கவேண்டும். கைவினை கலைஞர்களுக்கு திட்டம் 1ல் ஆண்களுக்கு 5 சதவீதமும் பெண்களுக்கு 4 சதவீதமும் வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடனாக ரூ.10 லட்சம் வழங்கப்படுகிறது. திட்டம் 2 ல் ஆண்களுக்கு 6 சதவீதமும் பெண்களுக்கு 5 சதவீதமும் வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடனாக ரூ.10 லட்சம் கடன் வழங்கப்படுகிறது.