பெரம்பலூர்: பெரம்பலூர் புறநகர் பகுதியான அரணாரை வடக்கு தெருவை சேர்ந்தவர் சிவக்குமார்(55), விவசாயி. இவர் தனது வீட்டில் பூனை ஒன்றை வளர்த்து வருகிறார். விடுமுறை நாளான நேற்று சிவக்குமார் தனது குடும்பத்தினருடன் வீட்டில் டி.வி. பார்த்து கொண்டிருந்தார். காலை 11 மணியளவில் வீட்டிற்குள் பாம்பு நுழைய முயன்றது. இதனை கண்ட வளர்ப்பு பூனை, பாம்புடன் நீண்ட நேரம் சண்டையிட்டது. இந்த சத்தத்தை கேட்டு சிவக்குமார் குடும்பத்தினர் எழுந்து வீட்டிற்கு வெளியே வந்து பார்த்தனர்.