சென்னை: கடந்த 10 மாதங்களில் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்றவர்களிடம் இருந்து ரூ.5.49 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. தமிழகம் முழுவதும் 4,300 டாஸ்மாக் கடைகள் உள்ளன. பெரும்பாலான கடைகளில் கூடுதல் விலை வைத்து மது விற்பனை மற்றும் நிர்ணயித்த நேரத்தை கடந்தும் விற்பனை, மறைமுக பார்கள் உள்ளிட்ட புகார்கள் தொடர்ந்து டாஸ்மாக் நிர்வாகத்திற்கு வந்த வண்ணம் இருந்தது. இந்த நிலையில், கூடுதல் விலைக்கு மது விற்றவர்களிடம் இருந்து ரூ.5.49 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. கூடுதல் விலைக்கு மது விற்பவர்கள் மீது எடுத்த நடவடிக்கை என்ன? என சமூக ஆர்வலர் காசிமாயன் ஆர்.டி.ஐ.யில் கேள்வி எழுப்பியிருந்தார்.