பல்லாவரம் உரிமையியல் நீதிமன்ற நடுவர் பொறுப்பேற்பு

ஆலந்தூர்: புதியதாக திறக்கப்பட்ட பல்லாவரம் உரிமையியல் நீதிமன்ற நடுவராக பவித்ரா பொறுப்பேற்றார். பல்லாவரம் தாலுகாவிற்குட்பட்ட பல்லாவரம், குரோம்பேட்டை, சங்கர் நகர், காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள வழக்குகளை விசாரிக்க பல்லாவரம் தொகுதிக்குட்பட்ட மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம், கீழ்கட்டளை பேருந்து நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டு, இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. செங்கல்பட்டில் இருந்து காணொலி மூலம், அமைச்சர் ரகுபதி மற்றும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ராஜா ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தனர். இதற்கான விழா கீழ்கட்டளையில் உள்ள பல்லாவரம் நடுவர் நீதிமன்றத்தின் நடுவராக பவித்ரா பொறுப்பேற்று, முதல் வழக்கை விசாரித்தார். விழாவில், வழக்கறிஞர்கள்  காவல்துறையினர், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: