சென்னை: தமிழ்நாட்டில் தெரு விளக்குகள் பராமரிப்பு, குடிநீர் விநியோகம் உள்ளிட்ட பணிகளுக்கு தனியார்களை நியமிப்பது தொடர்பான அரசாணையை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இது குறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் சிவதாஸ் மீனா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: தெருவிளக்கு பராமரிப்பு, மழைநீர் வடிகால், பாதாள சாக்கடை அமைப்பு மற்றும் திடக்கழிவு மேலாண்மை பணிகளை ஒப்பந்த அடிப்படையில் செயல்படுத்தவும், பராமரிக்கவும் தனியார் ஒப்பந்ததாரர் அல்லது ஏஜென்சியை ஈடுபடுத்த பேரூராட்சி நிர்வாக அதிகாரிகளுக்கு அனுமதி வழங்க பேரூராட்சி ஆணையருக்கு அனுமதி வழங்கப்படுகிறது.