பொன்னேரி: வடசென்னை அனல் மின்நிலையத்தில் இன்று காலை தொழில்நுட்ப கோளாறு காரணமாக, 810 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. அவற்றை சீரமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மீஞ்சூர் அருகே அத்திப்பட்டில் இயங்கி வரும் வடசென்னை அனல் மின்நிலையத்தின் முதலாவது நிலையில் 3 அலகுகளில் தலா 210 மெகாவாட், 2வது நிலையில் 2 அலகுகளில் தலா 600 மெகாவாட் என மொத்தம் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.