கர்நாடகாவிலிருந்து கடத்திய 200 கிலோ குட்கா பறிமுதல்: ராஜஸ்தான் வாலிபர் கைது

சென்னை: திருவள்ளூர் மாவட்டத்தில் குட்கா, கஞ்சா போன்ற போதைப் பொருட்களை கடத்தி வந்து விற்பனை செய்பவர்களை கைது செய்ய மாவட்ட எஸ்பி சிபாஸ் கல்யாண் உத்தரவிட்டிருந்தார். அதன்பேரில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், திருவள்ளூர் போலீசார் ஈக்காடு சாலை சந்திப்பில் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ராஜஸ்தான் மாநில பதிவெண் கொண்ட காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட 200 கிலோ போதைப் பொருட்கள் இருப்பது தெரியவந்தது.

விசாரணையில் போதைப் பொருட்களை கடத்தி வந்தவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஷகர்லால் (24) என்பதும், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து போதைப் பொருட்களை காரில் கடத்தி வந்து, திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது. இதையடுத்து 200 கிலோ போதைப் பொருட்களுடன் காரை பறிமுதல் செய்த போலீசார், கடத்தலில் ஈடுபட்ட ஷகர்லாலை கைது செய்தனர்.

Related Stories: