சென்னை: திருவள்ளூர் மாவட்டத்தில் குட்கா, கஞ்சா போன்ற போதைப் பொருட்களை கடத்தி வந்து விற்பனை செய்பவர்களை கைது செய்ய மாவட்ட எஸ்பி சிபாஸ் கல்யாண் உத்தரவிட்டிருந்தார். அதன்பேரில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், திருவள்ளூர் போலீசார் ஈக்காடு சாலை சந்திப்பில் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ராஜஸ்தான் மாநில பதிவெண் கொண்ட காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட 200 கிலோ போதைப் பொருட்கள் இருப்பது தெரியவந்தது.