புழல்: மீன் பிடிக்கும்போது, புழல் ஏரிக் கால்வாயில் தவறி விழுந்த வாலிபர் பரிதாபமாக பலியானார். அவரது உடல் 3 நாட்களுக்கு பிறகு ஏரியில் மீட்கப்பட்டது. செங்குன்றம் அடுத்த காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் பரத்குமார் (23). இவர், மாதவரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 12ம் தேதி தனது நண்பர்களுடன் ஆலமரம் பகுதியில் உள்ள புழல் ஏரிக்குச் செல்லும் கால்வாயில் மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது தவறி கால்வாயில் விழுந்தார். இதை பார்த்த அவரது நண்பர்கள் செங்குன்றம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர்.