அண்ணாநகர்: திருந்தி வாழப்போவதாக கூறிவிட்டு, உறுதிமொழி பத்திரத்தை மீறிய கஞ்சா வியாபாரியை போலீசார் மீண்டும் சிறையில் அடைத்தனர்.சென்னை டி.பி. சத்திரம் பூஜ்ஜி தெருவை சேர்ந்தவர் கஞ்சா வியாபாரி எழிலரசன் (49). இவர் மீது ஏற்கனவே கஞ்சா மற்றும் அடிதடி வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் உள்ளன. இந்நிலையில், கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பு கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் கோபியை, நேரில் சந்தித்து, ‘‘இனிமேல் எந்த ஒரு குற்ற சம்பவங்களிலும் ஈடுபட மாட்டேன். மறுபடியும் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டால் என் மீது நடவடிக்கை எடுக்கலாம். இனிமேல் திருந்தி வாழப்போகிறேன்’’ என எழிலரசன் உறுதிமொழி பத்திரம் எழுதி கொடுத்துள்ளார்.