கரூர்: கரூர் அருகே கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். கரூர் அடுத்த சுக்காலியூர் காந்திநகர் பகுதியில் குணசேகரன் என்பவருக்கு சொந்தமான புதிய வீடு கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இன்று சென்ட்ரிங் வேலை நடைபெற்று வந்துள்ளது. அப்போது மோகன்ராஜ், சிவா, மற்றும் ஜீவா என்ற 3 இளைஞர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வீட்டின் பின்புறம் கட்டி முடிக்கப்பட்ட கழிவுநீர் தொட்டியின் கான்கிரீட் மரத்தை பிரிக்க உள்ளே சென்ற சிவா என்பவர் விஷவாயு தாக்கி மயக்கமடைந்தார்.