உத்திரமேரூர்: உத்திரமேரூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாளாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. இதில், உத்திரமேரூர் பேரூராட்சிக்குட்பட்ட காக்கநல்லூர் கிராமத்தில் உள்ள இருளர் குடியிருப்பு பகுதியும் பாதிக்கப்பட்டது. இந்த குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள். இதையடுத்து அனைவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளியின் மழைக்கால நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.