திருவள்ளூர்: குட்கா, கஞ்சா ஆகிய போதைப் பொருட்களை கடத்திவந்து விற்பனை செய்பவர்களை கைது செய்யவேண்டும் என்று திருவள்ளூர் மாவட்ட எஸ்பி பா.சிபாஸ் கல்யாண் உத்தரவிட்டார். இதன்படி, போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீபபி தலைமையில், எஸ்ஐ வெங்கடேசன் தலைமையில் போலீசார் ஈக்காடு சாலை சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த ராஜஸ்தான் மாநில பதிவெண் கொண்ட சொகுசு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது அந்த காரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், விமல் வி-1 போன்ற 200 கிலோ எடை கொண்ட போதைப் பொருட்கள் இருப்பது தெரியவந்தது.