ஆம்பூர்: திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் காட்டுகொல்லை அருகே உள்ள தனியார் கல்குவாரியில் அதே பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் லோகநாதன்(25) வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி 9 மாதங்களே ஆகியுள்ளது. இந்நிலையில் இவர் கடந்த 3 நாட்களுக்கு முன், அதே குவாரியில் வேலை செய்து வந்த நாட்றம்பள்ளி அடுத்த பச்சூரை சேர்ந்த ரத்தினம்(45) என்பவருடன் முகம் மற்றும் உடல் பொலிவு குறித்த ஒரு வீடியோவை யூடியூப்பில் பார்த்துள்ளார். அதில் செங்காந்தள் கிழங்கு சாப்பிட்டால் முகம் பொலிவாகும் என வந்ததை நம்பி இருவரும் குவாரி அருகே உள்ள ஒரு இடத்தில் இருந்த செங்காந்தள் கிழங்கை பறித்து சாப்பிட்டுள்ளனர்.