சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சீர்காழியில் பெய்த வரலாறு காணாத மழையால் மழைநீர் தேங்கி இருப்பதாலும், விவசாய நிலங்களும், இறால் பண்ணைகளும் மழைநீரில் மூழ்கியதாலும் விவசாயிகளும், இறால் பண்ணை தொழிலாளர்களும், பொதுமக்களும் பெருமளவு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். சம்பா நெற்பயிர்கள் அனைத்தும் மழைநீரில் மூழ்கியுள்ளது. சீர்காழி அருகே திருநகரி பகுதியில் சுமார் 500 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள இறால் வளர்ப்பு பண்ணைகள் மழைநீரில் மூழ்கியுள்ளன.