சென்னை: ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பதவிக்கான முதல்நிலை தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சிக்கான நுழைவு தேர்வு தமிழகத்தில் 17 மையங்களில் வரும் 13ம் தேதி நடைபெறும் என்று அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசின் தலைமை செயலாளரும், அகில இந்திய குடிமைப்பணி தேர்வுப் பயிற்சி மையத்தின் தலைவருமான இறையன்பு வெளியிட்ட அறிவிப்பு: தமிழகத்தைச் சேர்ந்த இளநிலைப் பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகளுக்கு தமிழக அரசின் சார்பில் சென்னையிலுள்ள அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையத்திலும், கோயம்புத்தூர், மதுரை மாவட்டங்களில் உள்ள அண்ணா நூற்றாண்டு குடிமைப்பணி பயிற்சி மையங்களிலும் மத்திய தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணி முதல்நிலை தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.