சென்னை: பாஜ ஆட்சி இல்லாத மாநிலத்தில், ஆளுநரை வைத்து ஆட்சி நடத்தி வருகிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டினார். நவம்பர் புரட்சி தினத்தையொட்டி, சென்னை, பெரம்பூர் பகுதியில் வடசென்னை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் செஞ்சட்டை பேரணி நடந்தது. நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு பேசியதாவது: 2024 தேர்தலில் பாஜ ஒரு தொகுதியில் கூட டெபாசிட் வாங்க மாட்டார்கள். கோவை குண்டுவெடிப்பு விவகாரத்தில் அண்ணாமலை மற்றும் கவர்னர் மாநில அரசின் மீது பொய்யான குற்றச்சாட்டை வைத்து வருகின்றனர்.