சென்னை: சென்னை மாநகராட்சியின் சார்பில் நீர்வழித்தடங்களின் அருகாமையில் வசிப்பவர்களுக்கு கொசுவலைகள் வழங்கும் திட்டத்தின் கீழ் துணை மேயர் மு.மகேஷ்குமார் இன்று கொசுவலைகளை வழங்கினார். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நீர்நிலைகளின் அருகாமையில் வசிக்கும் பொதுமக்களுக்கு கொசுத் தொல்லை மற்றும் கொசுக்களால் பரவும் நோய்களைத் தடுக்கும் விதமாக, சென்னை மாநகராட்சி, பொசுகாதாரத்துறையின் சார்பில் குடும்பத்திற்கு ஒன்று வீதம் 2,60,000 கொசு வலைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.