வத்தலக்குண்டு : வத்தலக்குண்டு அருகே பழைய வத்தலக்குண்டு பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களில் நாட்டு வாழை, கற்பூரவல்லி போன்ற பலவகை வாழை விவசாயம் நடந்து வருகிறது.தற்போது வாழையில் வெடிப்பு மற்றும் குருத்துப் பூச்சிநோய் ஏற்பட்டு வாழை வாடுகின்றது. மழை தொடர்ந்து பெய்வதாலும் கண்மாய் நிரம்பி விட்டதாலும் இனி தண்ணீர் பிரச்சனை இல்லை என்று நிம்மதியாக இருந்த வாழை விவசாயிகளுக்கு தற்போது வாழையில் வந்துள்ள நோய்கள் கவலையை ஏற்படுத்தி உள்ளது.