சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்கியும் வழக்கத்துக்கு மாறாக, அதிகளவில் மழை பெய்து வரும் நிலையில் தமிழ்நாட்டில் உள்ள 432 ஏரிகள் மற்றும் நீர்நிலைகள் தண்ணீர் இன்றி வறண்டு உள்ளதாக நீர்வளத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 29ம் தேதி தொடங்கியது. இந்த பருவமழை காலத்தில், வருடத்தின் மொத்த மழைப்பொழிவில் 48 சதவிகிதம் தமிழகத்துக்கு கிடைக்கிறது. மேலும், கடந்த ஆண்டை விட அதிக புயல்கள் உருவாகும் எனவும், இந்த ஆண்டு இயல்பை விட 38% முதல் 75% வரை கூடுதல் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், சென்னை, மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட 17 மாவட்டங்களில் நடப்பாண்டு வடகிழக்கு பருவமழையானது, சராசரியை விட அதிகரிக்கும். வடகிழக்கு பருவமழை தொடர்ந்து மழை பெய்து வருவதால், தமிழ்நாட்டில் உள்ள நீர்த்தேக்கங்கள் வேகமாக நிரம்பிவருகின்றன.