மேட்டூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை தணிந்ததால், ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து சரிந்து வருகிறது. ஒகேனக்கல் காவிரியில் கடந்த இரண்டு நாட்களாக நீர்வரத்து 16 ஆயிரம் கனஅடியாக நீடித்த நிலையில் இன்று காலையும் நீர்வரத்து அதே அளவில் நீடிக்கிறது. இதேபோல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து நேற்று காலை 18 ஆயிரம் கனஅடியாக இருந்த நிலையில், மாலையில் 17 ஆயிரம் கனஅடியாக சரிந்தது. இன்று காலையும் நீர்வரத்து 17 ஆயிரம் கனஅடியாக நீடிக்கிறது.