மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 17 ஆயிரம் கனஅடியாக நீடிப்பு

மேட்டூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை தணிந்ததால், ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து சரிந்து வருகிறது. ஒகேனக்கல் காவிரியில் கடந்த இரண்டு நாட்களாக நீர்வரத்து 16 ஆயிரம் கனஅடியாக நீடித்த நிலையில் இன்று காலையும் நீர்வரத்து அதே அளவில் நீடிக்கிறது. இதேபோல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து நேற்று காலை 18 ஆயிரம் கனஅடியாக இருந்த நிலையில், மாலையில் 17 ஆயிரம் கனஅடியாக சரிந்தது. இன்று காலையும் நீர்வரத்து 17 ஆயிரம் கனஅடியாக நீடிக்கிறது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 17,000 கனஅடி வீதம், நீர்மின் நிலையங்கள் வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு விநாடிக்கு 750 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாகவும் உள்ளது.

Related Stories: