சென்னை: தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பொழிவு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், தேசிய பேரிடர் மீட்பு படையினர் 1,149 பேரும், தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் 899 பேரும் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கூறினார். தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் நேற்று சென்னை, எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் கடந்த 2ம் தேதி (நேற்று முன்தினம்) 38 மாவட்டங்களில் 18.01 மி.மீ. மழை பெய்துள்ளது. இதில் மயிலாடுதுறை மாவட்டத்தில் மட்டும் மிக அதிக மழை 116.08 மி.மீ. பெய்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் 220 மி.மீ. அதி கன மழை பெய்துள்ளது.
தமிழகத்தில் 4 நாட்கள் மழை நீடிக்க வாய்ப்பு தேசிய, தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை வீரர்கள் 2,048 பேர் தயார்: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தகவல்
- தேசிய
- தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- அமைச்சர்
- கே.கே.எஸ்.எஸ்.ஆர்
- ராமச்சந்திரன்