மக்கள் பாதிக்கப்படாமல் மழைநீர் அகற்றம்: தமிழக அரசுக்கு விஜயகாந்த் பாராட்டு

சென்னை: மக்கள் பாதிக்கப்படாதவாறு மழைநீர் உடனடியாக அகற்றப்பட்டுள்ளதற்கு தமிழக அரசுக்கு விஜயகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கை: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

இதனால் சென்னை தியாகராய நகர், வியாசர்பாடி, பெரம்பூர், கொளத்தூர் மற்றும் சுரங்கப் பாதைகள், சாலைகள், நெடுஞ்சாலைகள், தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழை நீரை உடனடியாக ராட்சத இயந்திரங்களைக் கொண்டு அகற்றிய தமிழக அரசுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டிய உடனே தமிழக அரசு துரித நடவடிக்கை மேற்கொண்டு மக்கள் பாதிக்கப்படாதவாறு மழைநீரை உடனடியாக அகற்றி உள்ளது. சென்னை மாநகராட்சியை சகஜ நிலைக்கு திரும்பிக் கொண்டு வந்த தமிழக அரசுக்கும் மாநகராட்சிக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

Related Stories: