பெரியகுளம்: அதிமுகவின் அடிப்படை விதிகளை சிலர் சுயநலத்திற்காக திருத்தியுள்ளனர், அதை எதிர்த்து தர்மயுத்தம் துவக்கியுள்ளோம் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் உள்ள பண்ணை வீட்டில் கோவை செல்வராஜ் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வத்தை நேற்று மாலை சந்தித்தனர். பிறகு ஓபிஎஸ் பேசும்போது, ‘‘எந்த ஒரு தொண்டனும் கட்சியின் தலைமை பதவிக்கு வரமுடியும் என்ற எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா வகுத்துத்தந்த கழக சட்ட விதிகளை சிலர் சுயநலத்திற்காக திருத்தியுள்ளனர்.