சென்னை: வியாசர்பாடி பகுதியில் 8 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் சென்னை அமலாக்க கோட்டத்தின் சென்னை/மையம், சென்னை/வடக்கு, சென்னை/தெற்கு, சென்னை/மேற்கு, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் அமலாக்க அதிகாரிகள் சென்னை/வடக்கு மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட வியாசர்பாடி பகுதியில் கூட்டு ஆய்வு மேற்கொண்ட போது 8 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் ரூ. 9,43,335/- (ரூபாய் ஒன்பது லட்சத்து நாற்பத்தி மூன்றாயிரத்து முன்னுhற்று முப்பத்தைந்து மட்டும்) இழப்பீட்டு தொகையாக மின் நுகர்வோருக்கு விதிக்கப்பட்டது.