சென்னை: சென்னையில் தேங்கிய மழைநீரை துரித நடவடிக்கை எடுத்து அகற்றிய முதல்வர், தமிழக அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார். எதிர்கட்சிகள் சுட்டிக்காட்டியதற்கு இணங்க, சென்னையில் தேங்கிய மழை நீரை துரித நடவடிக்கை மேற்கொண்டு, ராட்சத இயந்திரங்கள் கொண்டு மழைநீரை அகற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் தமிழக அரசுக்கும் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.