சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற குடியரசுத் தலைவரிடம் மனு அளிக்கும் திமுகவின் அழைப்புக்கு முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் ஆதரவு தெரிவித்துள்ளார். தமிழக ஆளுநரை திரும்பப்பெற கோரும் மனுவில் திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் கையெப்பம் இட வேண்டும் என்கிற திமுகவின் அழைப்பிற்கு தான் ஆதரவு அளிப்பதாக தன்னுடைய ட்விட்டர் பதிவில் ப.சிதம்பரம் கூறியுள்ளார். முன்னதாக திமுக எம்.பி.க்கள் மற்றும் ஒருமித்த கருத்து கொண்டுள்ள அரசியல் கட்சிகளின் எம்.பி.க்கள் 3ம் தேதிக்கு முன்பு அறிவாலயத்துக்கு வந்து ஆளுநரை திரும்ப பெற கோரும் மனுவில் கையெழுத்திட வேண்டும் என திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு அழைப்பு விடுத்திருந்தார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப்பெற குடியரசுத் தலைவரிடம் மனு: முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் திமுகவுக்கு ஆதரவு
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- கவர்னர்
- ஆர்என்என்
- குடியரசுத் தலைவர்
- ராவி
- முன்னாள்
- யூனியன்
- அமைச்சர் பி.
- சிதம்பரம் தும்வா