சென்னையில் இல.கணேசன் இல்ல விழா: செண்டை மேளம் வாசித்த மம்தா பானர்ஜியால் கலகலப்பு..!!

சென்னை: மணிப்பூர் ஆளுநரும், மேற்குவங்க பொறுப்பு ஆளுநருமான இல.கணேசனின் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னை வந்த மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, செண்டை மேளம் வசித்து மகிழ்ந்தார். கோடம்பாக்கம் ஆற்காட்டு சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று இல.கணேசனின் மூத்த அண்ணனின் 80வது பிறந்தநாள் விழா நடைபெறுகிறது. இதில் பங்கேற்க வந்த மம்தா பானர்ஜி, மண்டபம் வாயிலில் செண்டை மேளம் வாசித்த இசை கலைஞர்களை கண்டு ஓரிரு நிமிடங்கள் ரசித்தார்.

பின்னர் யாரும் எதிர்பாராத விதமாக செண்டை மேளத்தை வாங்கிய மம்தா பானர்ஜி, கலைஞர்களுடன் இணைந்து வாசித்தது அங்குள்ளவர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. ஆளுநர் இல.கணேசன் அண்ணனின் 80வது பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி பொறுப்பு துணை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோரும் வந்திருந்தனர். முதல்வர் மம்தா பானர்ஜி  செண்டை மேளம் வாசிக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Related Stories: