சென்னை: மழைநீர் வடிகால் பணிகளில் சென்னை மாநகராட்சி சிறப்பாக செயல்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே மேலாளர் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து தெற்கு ரயில்வே மேலாளர் நேற்று டிவிட்டரில் கூறியுள்ளதாவது: தண்டவாளங்களில் மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கு சென்னை மாநகராட்சிக்கு தெற்கு ரயில்வே பாராட்டு தெரிவித்துள்ளது. எழும்பூர் ரயில் நிலைய தண்டவாளங்களில் மழைநீர் தேங்காததால் ரயில்கள் வழக்கமான வேகத்தில் இயக்கப்படுகின்றன. சென்னை மாநகராட்சிக்கு நன்றி. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.