சென்னை: சென்னை மாநகரில் 100 சதவீதம் முழுமையாக மின்விநியோகம் கொடுக்கப்பட்டு வருகின்றன என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மின்வாரியம் சார்பில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை குறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், மழையால் பாதிப்பு ஏற்படாத வண்ணம் மின் விநியோகம் தொடர்கிறது. தமிழகம் முழுவதும் 40,000 மின்கம்பங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. மின் விநியோகம் சீராக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேவையான மின்கம்பங்கள், மின்மாற்றிகள் உள்ளிட்டவை தயார் நிலையில் உள்ளன.