திருவொற்றியூர்: திருவொற்றியூர், எண்ணூர் பகுதிகளில் பொதுமக்கள் கடலில் குளிப்பதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவொற்றியூர் சுங்கச்சாவடி முதல் எண்ணூர் நெட்டுக்குப்பம் வரை சுமார் 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடற்கரை பகுதி உள்ளது. இந்த கடற்கரை பகுதி பெரும்பாலும் சாலையை ஒட்டி இருப்பதால் பொதுமக்கள் குடும்பத்துடன் மாலை நேரங்களில் வந்து பொழுதுபோக்குகின்றனர்.
மேலும் சிறுவர்கள் மற்றும் வாலிபர்கள் ஆர்வத்தின் காரணமாக கடலில் குளிக்கவும் செய்கின்றனர். இவ்வாறு குளிக்கும்போது சில நேரங்களில் அலைகள் சீற்றத்தின் காரணமாகவும், கடல் அலையில் ஏற்படுகின்ற சுழற்சி காரணமாகவும் குளிக்கின்றவர்கள் கடலில் இழுத்துச் செல்லப்பட்டு விடுகின்றனர். இதில் நன்றாக நீச்சல் தெரிந்தவர்கள் பிழைத்துக் கொண்டாலும் பெரும்பாலானவர்கள் கடலில் மூழ்கி இறந்து விடுகின்றனர். குறிப்பாக, எண்ணூர் பெரிய குப்பம், சின்ன குப்பம், எர்ணாவூர் ராமகிருஷ்ண நகர், திருவொற்றியூர் காசி கோயில் குப்பம், பலகை தொட்டிக்குப்பம்,