சென்னை: வல்லூர் அனல் மின் நிலையத்தில் கொதிகலன் கசிவு காரணமாக 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகரில் உள்ள வல்லூர் தேசிய அனல் மின் கழகமும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமும் இணைந்து, வல்லூர் அனல் மின் நிலையத்தை இயக்கி வருகிறது.