ஒன்றிய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்; எஸ்.டி.பி.ஐ. கட்சி அறிவிப்பு

சென்னை: எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலகக்குழு கூட்டம் சென்னையில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாநில துணைத் தலைவர் அப்துல் ஹமீது, மாநில பொதுச்செயலாளர்கள் அச.உமர் பாரூக், அகமது நவவி, நிஜாம் முகைதீன், மாநில பொருளாளர் அமீர் ஹம்ஸா மற்றும் மாநில செயலாளர் அபுபக்கர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கல்வி நிறுவனங்களில் இந்தியை பயிற்றுவிக்கும் மொழியாக திணிக்கவும், வேலைவாய்ப்பிற்கும், நீதிமன்ற நடவடிக்கைகளுக்கும் இந்தி மொழியை கட்டாயமாக்கும் ஒன்றிய அரசின் திட்டத்திற்கு எதிராகவும், அந்த திட்டத்தை கைவிட வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் எஸ்.டி.பி.ஐ.கட்சி சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

Related Stories: