போக்குவரத்து விதிகளை மீறியவர்களிடம் ரூ42 லட்சம் அபராதம் வசூல்: 6,187 பேர் மீது வழக்குப்பதிவு

சென்னை: போக்குவரத்து விதிகளை மீறிய வாகன ஓட்டிகளிடம் கடந்த 3 நாட்களில் ரூ42 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த 3 நாட்களாக போக்குவரத்து போலீசார் விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டிகளிடம் இதுவரை ரூ42 லட்சம் அபராதமாக விதித்துள்ளனர்.

அதேபோல், 6,187 வழக்குகளை தற்போது வரை பதிவுசெய்துள்ளனர். விதிகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் யாருக்கும் பாரபட்சம் காட்டாமல், கூடுதல் அபராதம் விதிக்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: