சென்னை: கிராமசபை கூட்டம் போல் தமிழ்நாட்டில் முதல்முறையாக நகரசபை, மாநகர சபை கூட்டம் நடைபெற உள்ளது. வரும் ஒன்றாம் தேதி முதல் நகரசபை மற்றும் மாநகரசபை கூட்டங்களை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் ஜன.26, மே 1 , ஆகஸ்ட் 15, அக்.2, மார்ச் 22, நவ.1 ஆகிய 6 நாட்களில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கிராம சபை கூட்டத்தை பொறுத்தவரை அங்கு நடைபெற்று வரும் பணிகள் மற்றும் அவர்களின் கோரிக்கைகள் கேட்கப்படும். மேலும் கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் அரசின் கவனத்திற்கு கொண்டுசெல்ல அதற்கான திட்டங்கள் நிறைவேற்றப்படும்.