சென்னை: இலங்கை கடற்படையால் ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வதும், படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர் நிகழ்வுகளாக உள்ளது. தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை ஒன்றிய பாஜக அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதால் தான் இலங்கை அட்டூழியம் செய்கிறது என வைகோ கூறினார். தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் விவகாரத்தில் ஒன்றிய அரசு உடனடியாக தலையிட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.