சென்னை: சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஒருங்கிணைந்த தமிழ் கூட்டமைப்பு சார்பில் கவிஞர் வைரமுத்து தலைமையில் இந்தி திணிப்புக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கவிஞர் வைரமுத்து பேசியதாவது: தமிழை அதிகாரத்தால், அந்நியர்கள் படையெடுப்பால், மதத்தால், சாஸ்திரத்தால் அழிக்க பார்த்தார்கள். இப்போது சட்டத்தால் அழிக்க நினைக்கின்றனர். எனினும், தமிழ் மொழியை சாஸ்திரத்தாலோ, சட்டத்தாலோ அழிக்க முடியாது. இந்தி தெரியாதவர்கள் ஒன்றிய அரசின் பணியில் இனி இடம்பெற முடியாது என்று கூறி இந்தி திணிக்கப்படுகிறது.மாநில மொழிகளுக்கு எதிரான ஒன்றிய அரசின் பரிந்துரை வெற்று உரை மட்டுமே, அதனை புறம் தள்ள வேண்டியது நமது கடமையாகும்.