சென்னை: மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வரும் இடங்களில் முன்னெச்சரிக்கை தடுப்புகள், அடையாள பலகைகள் வைக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமை செயலாளர் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து தமிழக தலைமை செயலாளர் இறையன்பு ஊரக வளர்ச்சி துறை முதன்மை செயலாளர் அமுதாவுக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: பருவமழையை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சில இடங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டு, வேலைகள் முடிவுபெறாமல் உள்ள நிலையில் பள்ளங்கள் மூடப்படாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது சாமானிய மக்களுக்கு, பாதசாரிகளுக்கு பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது.