சென்னை: ஆந்திராவில் சுங்கச்சாவடியினர் தமிழக சட்டக் கல்லூரி மாணவர்களை கடுமையாகத் தாக்கி உள்ளனர். அவர்கள் காரில் பாஸ்ட்ராக்கில் பணம் இருந்தும் கூட, சுங்கச்சாவடியில் இருக்கும் பாஸ்ட்ராக் சோதனை செய்யும் கருவி பழுதுபட்டுள்ளதால், பணத்தை கட்டச் சொல்லி மிரட்டி உள்ளனர். அதற்கு சட்டக் கல்லூரி மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், சுங்கச்சாவடி ஊழியர்கள் கட்டைகள், கம்பிகளைக் கொண்டு சட்டக் கல்லூரி மாணவர்கள் மீது கடுமையாகத் தாக்கி உள்ளனர்.