தமிழக சட்டக் கல்லூரி மாணவர்கள் மீது ஆந்திராவில் சுங்கச்சாவடியினர் தாக்குதல்: வைகோ கண்டனம்

சென்னை: ஆந்திராவில் சுங்கச்சாவடியினர் தமிழக சட்டக் கல்லூரி மாணவர்களை கடுமையாகத் தாக்கி உள்ளனர். அவர்கள் காரில் பாஸ்ட்ராக்கில் பணம் இருந்தும் கூட, சுங்கச்சாவடியில் இருக்கும்  பாஸ்ட்ராக் சோதனை செய்யும் கருவி பழுதுபட்டுள்ளதால், பணத்தை கட்டச் சொல்லி மிரட்டி உள்ளனர். அதற்கு சட்டக் கல்லூரி மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், சுங்கச்சாவடி ஊழியர்கள் கட்டைகள், கம்பிகளைக் கொண்டு சட்டக் கல்லூரி மாணவர்கள் மீது கடுமையாகத் தாக்கி உள்ளனர்.

இதில் மாணவர்கள் பலர் காயம் அடைந்தனர். சுங்கச்சாவடி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, தமிழக சட்டக் கல்லூரி மாணவர்களில் காயம்பட்டவர்கள் மீது ஆந்திர காவல்துறை வழக்குப் பதிவு செய்து உள்ளனர். இதனை வன்மையாகக் கண்டிக்கிறேன். வழக்குகளை வாபஸ் பெறுவதோடு, இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட சுங்கச்சாவடியினர் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

Related Stories: