மானாமதுரை: மானாமதுரை அருகே மிளகனூரில் பெய்த கனமழையில் மண் வீடு இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்த மூவர் உயிர் தப்பினர். மானாமதுரை அருகே மிளகனூர் கிராமத்தை சேர்ந்த முத்துக்குமார் மனைவி கலைச்செல்வி (35) இவர் கணவரை இழந்து 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். இவர்கள் இருக்கும் வீடு மண் வீடு என்பதால், நேற்று முன்தினம் பெய்த கனமழையில் வீட்டின் ஒருபகுதி சேதமடைந்து நள்ளிரவு 3 மணியளவில் திடீரென இடிந்து விழுந்துள்ளது
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தபோது வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.