சென்னை: நடிகை மீரா மிதுணை காணவில்லை என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மீரா மிதுனின் தாய் புகார் தெரிவித்துள்ளார். பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசி வீடியோ வெளியிட்ட வழக்கில் மீரா மிதுன் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருப்பதாக நீதிமன்றத்தில் போலீசார் தெரிவித்திருந்தனர். இதனை அடுத்து அவரை காணவில்லை எனவும், கண்டுபிடித்து தருமாறும் அவரது தாயார் புகார் தெரிவித்துள்ளார்.