சென்னை: தேர்தல் நேரத்தில் பாஜக யுக்தியை மாற்றுவதாக திராவிட கழக தலைவர் கி. வீரமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், இலவசங்களால் நாடு கெட்டுப்போவதாக சொன்ன பிரதமர் நரேந்திர மோடி, குஜராத்தில் சமையல் கேஸ் இலவசமாக தரப்படும் என அறிவித்துள்ளார். குஜராத்தில் தேர்தல் நெருங்கும் நிலையில் இலவச சமையல் எரிவாயுவை வழங்குவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார். தேர்தல் நேரத்தில் யுக்திகளை மாற்றுகிறார்கள்; வாக்காளர்களே ஏமாறாதீர்! வீழ்த்திடுவீர்! எனவும் கூறியுள்ளார். குஜராத்தில் பாஜக வெற்றி பெறுவது சந்தேகம் என்ற நிலையில் அங்கு வித்தை தேவைப்படுகிறது என்ற ஊகம் உண்மையாகிவிட்டது.