கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே அரசு பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், யோகாசனத்தில் 3 உலக சாதனை படைத்து, கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்திருக்கிறார். அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. கும்மிடிப்பூண்டி அருகே நாகராஜகண்டிகை கிராமத்தை சேர்ந்தவர்கள் பிரபு-வினோதினி தம்பதி. இவர்களின் மகள் பி.ஹேமஸ்ரீ (7). இவர், அதே கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும் ஸ்ரீசங்கரி யோகா பயிற்சி மற்றும் ஆராய்ச்சி பள்ளியில் கடந்த 3 ஆண்டுகளாக ஹேமஸ்ரீ தீவிர யோகாசன பயிற்சி பெற்று வந்திருக்கிறார்.