சென்னை: சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தொழிலதிபர் வீட்டில் ஒரு கிலோ தங்கம் கொள்ளை போன சம்பவத்தில் தெலுங்கானாவில் பதுங்கியிருந்த கொள்ளையன் கைது செய்யப்பட்டான். தமிழகத்தில் குற்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. குறிப்பாக தனியாக செல்லும் பெண்களிடம் செயின் பறிப்பது, யாருமில்லா வீட்டில் நகை, பணத்தை கொள்ளையடிக்கும் கும்பல்களின் தொல்லைகள் அதிகமாகி வருகிறது. இதனிடையே சென்னை கீழ்ப்பாக்கத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 1 கிலோ நகை கொள்ளையடிக்கப்பட்டது. சென்னை கீழ்ப்பாக்கத்தில் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் சாய் வெங்கட் என்பவர் வசித்து வருகிறார். சாய் வெங்கட் குடும்பத்துடன் நேபாளத்துக்கு சென்றுள்ளார்.