சென்னை: ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் ஆசிரியர் பணியிடங்கள் குறித்து அனைத்து மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் மேல்நிலைப்பள்ளி / உயர்நிலைப்பள்ளி / நடுநிலைப்பள்ளிகளில் கல்வி பயிலும் மாணக்கர்கள் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை மற்றும் 9 முதல் 10-ம் வகுப்பு வரை எண்ணிக்கை மற்றும் அனுமதிக்கப்பட்ட பாட வாரியான பட்டதாரி ஆசிரியர்களின் எண்ணிக்கை, தற்போது பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களின் பாட வாரியான விவரங்கள் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.
18.10.2022 அன்றைய நிலையிலான பாடவாரியான காலிப்பணியிட விவரங்கள் தங்களது G-Mail முகவரிக்கு Google Form தயார் செய்து அனுப்பப்பட்டுள்ள அதில் தெரிவிக்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் விடுபாடு இல்லமல் முழுமையாக பூர்த்தி செய்து 20.10.2022 மாலை 5.00 மணிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இது மிகவும் அவசரம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.