சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம், புஞ்சை புளியம்பட்டி எஸ்ஆர்டி நகரை சேர்ந்த பாஜ பிரமுகர் சிவசேகருக்கு சொந்தமான கார் தீ வைத்து எரிக்கப்பட்டது. இவ்வழக்கில் பிஎப்ஐ மற்றும் எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் புஞ்சை புளியம்பட்டியை சேர்ந்த பவானிசாகர் தொகுதி எஸ்டிபிஐ கட்சி துணைத்தலைவர் அமானுல்லாவும் ஒருவர்.