‘இபிஎஸ், ஓபிஎஸ்சுக்கு கனவுல வந்து புத்தி சொல்லுங்க: எம்ஜிஆர் படம் முன் அதிமுக தொண்டர் கதறல்

குடியாத்தம்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதிகளில் நேற்று முன்தினம் அதிமுகவின் 51வது ஆண்டு விழாவையொட்டி ஆங்காங்கே கொண்டாட்டங்கள் நடந்தன. இதேபோல் காமராஜர் பாலம் அருகே உள்ள அண்ணா, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடத்திற்கு வந்த அதேபகுதியை சேர்ந்த எம்ஜிஆர் ரசிகரும், முன்னாள் அதிமுக நகர செயலாளருமான ஒருவர், எம்.ஜி.ஆர் சிலைக்கு தீபாராதனை செய்தார்.

அதன்பின்னர் அங்குள்ள கட்சி கொடி கம்பத்தின் கீழ் வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆரின் உருவ படத்துக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து திடீரென, ‘அதிமுகவில் இ.பி.எஸ், ஓ.பி.எஸ் என தனித்தனியாக பிரிந்து கிடக்கின்றனர், இதனால் தொண்டர்களும் குழப்பத்தில் உள்ளனர். எனவே இபிஎஸ், ஓபிஎஸ் கனவுல வந்து அவர்கள் இருவருக்கும் புத்திமதி சொல்லுங்க தலைவா’ எனக்கூறியபடி மண்டியிட்டு கதறி அழுதார்.  இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: