திருவெறும்பூர்: காவிரி, கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் திருச்சியில் 300 ஏக்கர் வாழை நீரில் மூழ்கியது. சேலத்தில் மழை காரணமாக வீடு இடிந்து 2 மூதாட்டிகள் பலியாகினர். கனமழை காரணமாக காவிரி, கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ரங்கம் நாட்டு வாய்க்கால் இடையே திருவானைக்காவல், பனையபுரம், உத்தமர்சீலி, கவுத்தரசநல்லூர், கிளிக்கூடு உள்ளிட்ட பகுதிகளில் விளைநிலங்களில் தண்ணீர் புகுந்து 300 ஏக்கர் வாழை பயிர்கள் மூழ்கியது. இந்த ஆண்டு காவிரி, கொள்ளிடத்தில் 4வது முறை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் மழை: சேலம் அடுத்துள்ள திப்பம்பட்டியை சேர்ந்தவர் சீரங்காயி (75).