குன்றத்தூரில் கண்டெய்னர் லாரி மோதியதில் அண்ணா சிலை சேதம்: போலீஸ் விசாரணை

குன்றத்தூர்: குன்றத்தூரில் வழி தெரியாமல் சென்ற கண்டெய்னர் லாரி மோதியதில் அண்ணா சிலையின் வலது கை உடைந்துள்ளது. ஸ்ரீபெரும்புதூரில் இருந்து பல்லாவரம் நோக்கி சென்ற கண்டெய்னர் லாரி குன்றத்தூர் லாலாசத்திரம் அருகே சாலையில் செல்ல முயன்றது. மேலே சென்ற கேபிள் வயர் லாரியில் சிக்கி அண்ணா சிலையின் வலது கை உடைந்தது. விபத்தை ஏற்படுத்திய தென்காசியைச் சேர்ந்த ஓட்டுநர் வெள்ளத்துரையிடம் குன்றத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். 

Related Stories: