சென்னை: சென்னையில் மாணவி சத்யா கொலை செய்யப்பட்டது மனிதாபிமானமற்ற செயல். விழிப்புடன் இருந்து பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்திட வேண்டும் என சசிகலா வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்: சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் மாணவி சத்யாவை தள்ளிவிட்டு கொலை செய்துள்ள சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.